23/11/2019

அனுபவம்_2


புசிக்காத பழமொன்றின்
ருசிபற்றிக் கேட்டால்
இதுபோல்...அதுபோலெனப்
பொதுவாய்ச் சொல்லிடலாம்!
எதுபோல் எனக் கேட்டால்
எப்படி நாம் சொல்லுவது?!

ஒரு மரத்தின் கனிகளே
ஒரு சுவை தராதபோது
ஒவ்வொரு கனியையும்
உரைப்பது எப்படி?!

அனுபவித்து உணர்ந்ததாய்
அனுபவஸ்தர் சொல்வது
அனுபவித்த அவர்களின்
அனுபவங்களை மட்டுமே!
இங்கே
அனுபவ உரைகொண்டு
அனுமானிக்க முடியும்!
ஆனால்
அனுபவ உண்மையினை
அனுபவமே தரும்!

💐💐💐💐💐💐💐💐💐

ஆம்..
அனுபவங்கள் அத்தனையும்
அகத்திலேப் பதிவாகி
பதிவான அத்தனையும்
புதுப்புது எண்ணங்களாகி
...........எண்ணங்களின் கூட்டணியில்
...........எழுச்சிமிகு சொற்களாகி
...........சொற்களின் கூட்டணியில்
...........சொற்பொருள் செயலாகி
அனைத்துச் செயல்விளைவும்
அழுத்தமாய்ப் பதியுமெனில்
அனுபவங்கள் அத்தனையும்
ஆசானாய் ஆகுமன்றோ?!

✍️செ. இராசா

#அனுபவம்_2

No comments: