12/11/2019

நீரினை மீன்கள் துறந்தால்...


நீரினை மீன்கள் துறந்தால்- அதன்
நிலைதான் என்ன ஆகும்?- உந்தன்
நினைவினை நானும் துறந்தால்- அதன்
நிலையே அவையும் ஆகும்!

தமிழைத் தமிழன் மறந்தால்- அவன்
தலைவிதி என்ன ஆகும்?- கண்ணே
உன்னை நானும் பிரிந்தால்- ஐயோ
என்விதி போலே மாறும்!

மனிதம் நன்றாய் மலர்ந்தால்- இந்த
மதங்கள் என்ன ஆகும்?!- நாம்
காதலில் ஒன்றாய் இணைந்தால்- நம்
கண்களின் நிலையாய்ப் போகும்!

செ. இராசா

******************************************
👇👇👇இது ச்சும்மா கொசுறு👇👇👇
******************************************

கட்சிகள் கொள்கையை விடுத்தால்- இங்கே
காட்சிகள் எப்படி மாறும்?!- நாம்
கவிதைகள் செய்வதை விடுத்தால்- இந்தப்
புவியின் சுழற்சியா மாறும்?!!

No comments: