11/11/2019

பாலைமண்ணில் சோலைப்பூவாய்



#பாலைமண்ணில்_சோலைப்பூவாய்
பூத்தமகன் நீயே-இந்த
ஏழைநெஞ்சில் அன்புத்தேனாய்
இன்பம்சேர்த்தாயே..
எந்தனுள்ளே சுவாசமாய்
இதயம்போடும் தாளமாய்
கண்ணிலுள்ளே பாவையாய்
எண்ணம்பாடும் ராகமாய்
விண்ணில் இருந்து மண்ணில் தோன்றிட
என்னுள் வந்தோனே- நீயென்
தங்கத்தேர்தானே!!!

சரணம்- 1
**********
நீ பிறந்த நாள்;
தாயாய்த் தரம் உயர்ந்த நாள்!!
உன்னில் எந்தன் தந்தை பிம்பம்
பார்த்து வியந்தேன் நான்!

நீ நிமிர்ந்த நாள்!- தத்தி
நீ தவழ்ந்த நாள்!
நீ அமர்ந்த நாள்!- மண்ணில்
நீ நடந்த நாள்!
நீ வளர்ந்த நாட்களெல்லாம்
நானும் வளர்ந்தேனே
நீ படித்த பாடமெல்லாம்
உன்னில் கண்டேனே
உன்னால் கண்டேனே 

சரணம்-2
**********
நீ மணந்த நாள்;
மேலும் நான் உயர்ந்த நாள்!
உன்னில் எந்தன் தாயின் பிம்பம்
பார்த்து வியந்தேன் நான்!

நீ வளர்ந்ததால்- எம்மை
நீ பிரிந்ததால்;
தீ பிடித்ததாய்- என்னுள்
நான் அழுவதால்;
நோய் பிடித்த விலங்குபோலே
நானும் ஆனேனே!
நான் துடிக்கும் வேதனையை
நீயும் அறிவாயோ..
வந்து பார்ப்பாயோ!!

✍️செ. இராசா

No comments: