27/11/2019

வெண்பாவில் வாழ்த்து!-- #முனைவர்_இளஞ்செழியர்



என்னுரை
💐💐💐💐
தூரிகையில் மைத்தொட்டுத்
...........தோற்றுவித்த ஓவியத்தைக்
காரிகையின் கைத்தொட்டே
...........காமுற்றக் காதலன்போல்
பார்த்தகண் மூடாமல்
...........பார்த்தபடி நின்றவனாய்
வார்க்கின்றேன் வெண்பாவில் வாழ்த்து!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

#முனைவர்_இளஞ்செழியர்
.............முற்போக்கில் மூத்தோர்
வினையின் விளைந்திட்ட
............வித்தைகள் காத்தோர்
துணையின் விளைவாலே
............தொண்டுகள் செய்யும்
அணையா விளக்கென்றால் ஆம்!

#கவிஞர்_இளஞ்செழியர்
..........கற்பனைத் தேரில்
கவிதைக் குதிரையின்
.........கட்டவிழ்த்து விட்டாற்போல்
காட்டாற்று வெள்ளமாய்க்
........கண்டபடி ஓடியெம்மை
ஆட்டுவிக்கும் பாவலனா? ஆம்!!

#ஓவியரி_ளஞ்செழியர்
...........ஓவியமாய்த் தீட்டுகின்ற
ஓவியத்தின் உட்பொருளில்
...........ஒன்றிப்போய் நிற்கின்ற
காவியத்தில் கம்பனைப்போல்
.........காட்சிகளைக் காட்டுகின்ற
ஓவியத்தின் நாயகனா? ஓம்!

மூன்றே முகங்கள்தான்
........முத்தாய்ப்பாய்ச் சொன்னாலும்
சான்று பலவுண்டு
.........சான்றோனை யாம்போற்ற;
ஆண்டு பலவாழ்ந்திங்(கு)
.........ஆற்றிடுவீர் நற்தொண்டு!
வேண்டிப் பணிகின்றேன் வீழ்ந்து!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

No comments: