23/11/2019

துப்புரவுத் தெய்வங்கள்- பாடல்



துப்புரவுத் தெய்வங்கள்- பாடல்
💐💐💐💐💐💐💐💐💐💐💐

துப்புரவு செய்பவர்கள்
துப்புரவு செய்யலைன்னா
எப்படித்தான் போகும்நம்ம நாடு? - சொல்
எப்படித்தான் போகும்நம்ம நாடு?!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

குப்பைமேல குப்பைகொட்டி
குப்பையாகச் சேர்ந்ததுன்னா
கப்பாலே நாறும்நம்ம நாடு- ஆமாம்
கப்பாலே நாறும்நம்ம நாடு!

பாதாளச் சாக்கடைகள்
பாழாகிப் போச்சுதுன்னா
நோயாகிப் போகும் நம்ம நாடு- ஆமாம்
நோயாகிப் போகும் நம்ம நாடு!

நெகிழியெல்லாம் கூடியிங்கே
நிலமெல்லாம் கெட்டுச்சுன்னா
நீரின்றி வாடும் நம்ம நாடு- ஆமாம்
நீரின்றி வாடும் நம்ம நாடு!

ஆனால் பாருங்க....

துப்புரவு செய்பவர்கள்
துப்புரவா வேலை செய்ய
கையுறையும் காலுறையும் இல்லை-பாவம்
கையுறையும் காலுறையும் இல்லை!

சரிதான்னு சம்மதிச்சு
சாக்கடைய அள்ளப்போனால்
உயிருக்கும் உத்திரவாதம் இல்லை-அது
வயிறுக்கும் புரியிறது இல்லை!

சந்திரனில் தண்ணிதேட
சந்திராயன் விட்டபோதும்
சந்தில்மட்டும் எந்திரமேன் இல்லை- ஆமாம்
சந்தில்மட்டும் எந்திரமேன் இல்லை!

சரி விடுங்க...
இனிமேலாவது....

துப்பரவுத் தோழர்களை
எப்போதுமே ஆதரிச்சு
சிங்கப்பூரா மாற்றிடுங்க ஐயா- ஆமாம்
சீக்கிரமா மாற்றிடுங்க ஐயா!!

மக்கா..நமக்குந்தான்

சுத்தம்செய்யும் சாமிகளை
பத்திரமாப் பாதுகாத்து
எப்போதுமே ஆதரிப்போம் மக்கா- நாமும்
எப்போதுமே ஆதரிப்போம் மக்கா!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

செ. இராசா

இப்பாடல் பள்ளிக் குழந்தைகளுக்காக பாசமிகு தம்பி பெனடிக் அருள் அவர்களின் வேண்டுகளோளுக்கிணங்க படைக்கப்பட்டது.

மனமார்ந்த நன்றி தம்பி💐💐💐🙏🙏🙏🙏💐💐💐

No comments: