28/11/2019

எண்ணச் சமரடக்கி

எண்ணச் சமரடக்கி எப்போதும் ஆள்பவன்முன்
மண்ணாலும் வேந்தனும் மண்!

✍️(எண்ணத்தரசன்...தலைப்பு தம்பி Manikandan KR​)

எண்ணச் சமரடக்கி எப்போதும் ஆள்பவன்முன்
மண்ணாலும் வேந்தனும் மண்ணென்றே- எண்ணியதால்
எண்ணத் தரசனென என்னைநீ சொன்னாயோ?!
எண்ணி வியக்கின்றேன் இன்று!

No comments: