12/11/2019

உன்னை அறிந்தால் உயர்வு

எல்லாம் தெரியுமென
........எப்போதும் எண்ணாமல்
கல்லா விடயத்தைக்
........கற்பனையாய்ச்-சொல்லாமல்
தன்னை உயர்வென்றே
.........தற்பெருமை கொள்ளாமல்
உன்னை அறிந்தால் உயர்வு!

No comments: