22/05/2019

“சினமற்ற மனிதன் பிணத்திற்கு சமம்”

“சினமில்லா குணம்” என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதைக்கு நண்பர் சிங்கம் ராஜ் சிங்கம்அவர்கள் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார்கள், அதாவது;
“சினமற்ற மனிதன் பிணத்திற்கு சமம்” என்று,
அதற்கு நான் அளித்த பதில் பின்னூட்டம்;

நல்லது நண்பரே...
சினம் கத்தியைப்போல் இருக்கட்டும்
ஆனால்
கொலைகாரன் கையில் இருக்கும் கத்தியாய் அல்லாமல்
மருத்துவரின் கையில் இருக்கும் கத்தியாய் இருக்கட்டும்
சினம் தீயைப்போல் இருக்கட்டும்
ஆனால்
குடிசையைக் கொளுத்தும் தீயாய் அல்லாமல்
கலங்கரையில் ஒளிரும் தீபமாய் இருக்கட்டும்
சினம் தீவிரமாய் இருக்கட்டும்
ஆனால்
தீவிரவாதியின் வெறியாய் அல்லாமல்
புலிகளின் ஒழுக்க நெறியாய் இருக்கட்டும்
அப்படி இருந்தால் சினம் சரியே
சரிதானே...!!!

✍️செ. இராசா

No comments: