30/05/2019

#மாதக்_கடைசி_புலம்பல்


ஒவ்வொரு முறையும்
உன் இருப்பை நன்றாக உணர்கிறேன்
ஆனால்..
நீ இல்லாத அந்த நாட்களில் மட்டும்

ஒவ்வொரு முறையும்
உன்னைக் கவனமாகக் கையாள்கிறேன்
ஆனால்
நீ இருக்கும் ஆரம்ப நாட்களில் மட்டும்..

ஒவ்வொரு முறையும்
உன்னை பிடித்துவைக்கவே முயல்கிறேன்
ஆனால்
நீ தான் எப்போதும் பிடிகொடுப்பதே இல்லை..

இப்போதும் காத்திருக்கிறேன்..
எப்போது வருவாய் என் வங்கிக்கு?!

#மாதக்_கடைசி_புலம்பல்

No comments: