03/05/2019

#மலையாளப்_பெண்பூவே



தனனானே தன்னானே
தனனானே தன்னானே
தனனானே தன்னா நன்ன நானே நானே
தனனானே நன்னா நன்ன நானே

#மலையாளப்_பெண்பூவே
விளையாடும் கண்மானே
உனைக்கான ஓடி வந்தேன் மானே நானும்
உனக்காக ஒடி வந்தேன் மானே

அழகான மீசையிலே
குரும்பான பார்வையிலே
எனைக்கான ஓடி வந்த மாமா நீயும்
எதற்காக ஓடி வந்தாய் மாமா

அடியாத்தி செண்பகமே
பிடிக்காதா?! என்முகமே
விழியாலே என்னைக் கொன்ற மானே உன்னால்
பழியாடாய் ஆகிப்போனேன் நானே

விடிவெள்ளிப் பேச்சாலே
வெடிக்காதே என்மாமா
தமிழாலே என்னை வென்ற மாமா உன்னால்
தனித்தீவாய் நானுமானேன் மாமா

✍️செ. இராசா

No comments: