13/05/2019

நான் என்னுடன்

அறம்பற்றி சொல்லப் போகிறேன்
🗣அதற்குத்தான் அறநூல்கள் இருக்கிறதே?

உணர்ச்சியை கொட்டப் போகிறேன்
🗣சமயநூல்களில் நிறைய கொட்டிவிட்டார்களே!!

கற்பனையில் கலக்கப் போகிறேன்
🗣கம்பனிடன் கடன் வாங்கியா?

வரிகளை சுருக்கப் போகிறேன்
🗣வள்ளுவனை உள் வாங்கியா?

ஒரே அடியில் சொல்லப்போகிறேன்
🗣ஔவை செய்து விட்டாளே?!!

பாடலில் புரட்சி செய்வேன்
🗣பாரதியார் என்ன செய்தாராம்?

கவிதையை திரையில் ஏற்றுவேன்
🗣கவியரசர் ஏற்றிவிட்டாரே?

வடிவங்களை மாற்றிச் செய்வேன்
🗣விக்டர்தாசர் மாற்றிவிட்டாரே?

எதையாவது கிறுக்கப் போகிறேன்
🗣அதைத்தானே செய்கிறாய்?!

அமைதியாய் இருக்கப்போகிறேன்
🗣ஆகா...நீ நல்ல கவிஞனய்யா

✍️செ. இராசா

No comments: