03/05/2019

மரபை புதுக்கவிதை வடிவத்தில் சந்த நயத்தில் எழுதிய முயற்சி--குறள்



கடலில் கரைந்துள்ள கல்லுப்பாய் எந்தன்
உடலில் கரைந்தாயே நீ!

கவியில் கலந்துள்ள கற்பனையாய் எந்தன்
உயிரில் கலந்தாயே நீ!

மலரில் உறைந்துள்ள மாமணமாய் எந்தன்
உலகில் உறைந்தாயே நீ!

மதுவில் ஒளிந்துள்ள மாவிடமாய் இன்றென்
மதியை ஒளித்தாயே ஏன்?!

✍️செ. இராசா

(மரபை புதுக்கவிதை வடிவத்தில் சந்த நயத்தில் எழுதிய முயற்சி. இந்தப் படம் பார்த்ததால் தோன்றிய கவிதை இது)

#நான்கு_குறள்_வெண்பாக்கள்

No comments: