08/05/2019

#எங்கே_இருந்தாய்_மகனே?






#எங்கே_இருந்தாய்_மகனே?-நீ
எங்கே இருந்தாயோ?!
எந்தன் வழியாய் வருமுன்னே- நீ
எங்கே இருந்தோயோ?!

எந்தையின் குருதியில் என்னைப்போல்-நீ
உந்தையின் குருதியில் ஒளிந்தாயோ?
தந்தையின் கடத்தல் ஓட்டத்திலே- நீ
மந்தையில் முந்தியே வந்தாயோ?

சிந்தையில் உன்னை நினைத்தாலே- நீ
விந்தையின் வடிவாய்த் தோன்றுதடா?!
தந்தையின் தொடராய் வந்தவனே- நீ
பந்தயக் குதிரை இல்லையடா?!

✍️செ. இராசா

No comments: