06/05/2019

#தவம்_பழகு






இன்னல் தருகிற உயிர்களுக்கும்
இன்னா தராதத் தவம் பழகு!
எள்ளி நகைக்கிற எதிரியையும்
அள்ளி அணைத்திட தவம் பழகு!

எண்ணிய தெல்லாம் ஈடேற்றும்
எண்ண உரமிடத் தவம் பழகு!
பண்ணிய தெல்லாம் வேரறுக்கும்
பண்பினைத் தருகிறத் தவம் பழகு!

மண்ணுயி ரெல்லாம் நேசிக்கத்
தன்னுயி ரறிகிறத் தவம் பழகு!
எல்லா வளமும் வந்தடைய
வள்ளுவம் காட்டிய தவம் பழகு!

No comments: