03/05/2019

நீரின்றி வாழ்வேனா சொல்?--குறள்




நீரின்றி வாழாத நெற்பயிரைப் போல்நானும்
நீரின்றி வாழ்வேனா சொல்?

பற்றினை விட்டிடாப் பக்கிரி போல்நானும்
பற்றாது நிற்பேனோ சொல்?

பொய்யிலே வாழும் புலவனைப் போல்நானும்
பொய்யினைச் சொல்வேனா சொல்?!

வழிதவறிப் போகின்ற வாத்தினைப்
போல்நான்
குழியிலே வீழ்வேனா சொல்?!

✍️செ. இராசா

No comments: