18/05/2019

வெளிநாடு-1


வெளிநாடு போனாக்க
வெளிச்சம் வருமென்று
கற்பனை ராசாவாய்
கனவிலே வீடு கட்டி
அதிலே குடியேற
அயல்நாடு முயன்றாலோ
அசலும் போலியுமாய்
ஆயிரம் ஏஜண்டுகள்

நாணய ஏஜெண்டிடம்
நாணயத்தைக் கொட்டிவிட்டு
வேலையை எதிர்பார்த்து
வெறியோடு சென்றாலோ
வந்த வேலை ஒன்றாக
தந்த வேலை வேறாக
மாதங்கள் போனாலும்
ஊதியங்கள் கிட்டாது

இரண்டு வருடங்களை
எப்படியோ கடந்தவுடன்
வரவே மாட்டேன்னு
வார்த்தைகளைக் கொட்டிவிட்டு
செத்துப் பிழைச்ச காசில்
செண்டுகளப் பூசிக்கிட்டு
சந்திக்கும் அனைவருக்கும்
சாக்லெட்டில் வாயடைத்தால்
இரண்டு மாசத்தில்
எல்லாமே தீர்ந்துபோக
கடவுச்சீட்டோடு
அடகுக்கடை போயிவந்தால்
தெரிஞ்ச உறவெல்லாம்
தெரியாமப் பேசுவாக;

உனக்கென்ன மகராசன்
நினைச்சாப் பொயிடுவன்னு

✍️செ. இராசா

No comments: