27/05/2019

விலக விலகவே சுடுகிறாய்



விலக விலகவே சுடுகிறாய்- நீ
விரும்பி வந்தால் குளிர்கிறாய்!

பழகப் பழகவே இனிக்கிறாய்- நீ
பழையதைப் பேசியே வதைக்கிறாய்!

கடைக்கு என்றால் துளிர்க்கிறாய்- நான்
தடையொன்று போட்டால் வெடிக்கிறாய்!

அம்மா என்றால் சிரிக்கிறாய்- என்
அம்மா என்றால் முறைக்கிறாய்!

சும்மா சும்மா நகைக்கிறாய்- ஏன்?!
சும்மா சொன்னால் பகைக்கிறாய்!

✍️செ. இராசா

#சும்மா

No comments: