13/05/2019

இமைக்கா நொடிகளையும்


மலரும் புன்னகையில்- எனை
மயக்கும் மல்லிகையே- நீ
உதிர்க்கா வார்த்தையையும்- என்
உதிரம் சொல்லுதடி!

கண்ணில் கவியெழுதி- என்
நெஞ்சில் பதிந்தவளே- நீ
நினைக்கா வரிகளையும்- என்
நெஞ்சம் படிக்குதடி!

இமையில் தாளமிட்டு- எனை
இசைக்கும் மெல்லிசையே- உன்
இமைக்கா நொடிகளையும்- என்
இதயம் உணருதடி!

✍️செ. இராசா

No comments: