07/05/2019

பழந்தரும் சிறுவன் நான்!



பழம்பெருங் கவிஞனில்லை- அன்புப்
பழந்தரும் சிறுவன் நான்!
பலம்காட்டும் வீரனில்லை- அன்புப்
பாலம்கட்டும் பொறிஞன் நான்!

வேழம்போல் உருவமில்லை- அன்பில்
வேழமே சிறிய வில்லை!
ஆழம்போல் ஞானமில்லை- அன்பின்
ஆழமே அகில எல்லை!

அதிகாரம் எனக்கில்லை- அன்பில்
அதி-காரம் தேவையில்லை- துளி
அகங்காரம் எனக்கில்லை- அன்பில்
அகம்-காரம் ஆவதில்லை!

✍️செ. இராசா

No comments: