11/05/2019

#ஆம்_நான்_பணம்_பேசுகிறேன்




ஆசையின் வேகத்தில் கைப்பற்றி
ஐயிரு விரல்களில் விளையாடி
எண்ணி எண்ணியே மகிழ்வுற்று
எண்ணிய வேகத்தில் இடம்மாற்றி
அகத்தில் பதுக்கிய திமிரோடு- நீ
அலைந்து திரிவது யாராலே?!

இருக்கும் பொழுதில் அலட்சியமாய்
இல்லாப் பொழுதில் பைத்தியமாய்
எளிதில் கெடுக்கிற திராவகமாய்
எங்கும் பறக்கிற புள்ளினமாய்
மதுவில் மூழ்கிய வண்டினமாய்- நீ
மதியின்றிப் போவது யாராலே?

வருகிற பொழுதில் இன்முகமாய்
வராத பொழுதில் துன்முகமாய்
தேவைக்கு ஏங்கிடும் காவிரியாய்
தேர்தலில் அடிக்கிற கஜாவாய்
கருப்பு வெள்ளைக் காகிதமாய்- உனைக்
கலங்க வைப்பவன் நான் தானே!!!

#ஆம்_நான்_பணம்_பேசுகிறேன்

No comments: