25/05/2019

#பள்ளி_மாணவன்

படி படி என்றே
படுத்தாத அம்மா
வெடி வெடி என்றே
வெடிக்காத அப்பா

முகநூல் பார்க்கையிலே
முறைக்காத அக்கா
வாட்சப் நோண்டையிலே
வையாத அண்ணா

வொர்க்சீட் தந்தே
வதைக்காத மிஸ்..
நீட்டு கேட்டு என்றே
வாட்டாத சிஸ்டம்..

இதற்கிடையில் நான்..
எப்படி? என எண்ணும்போதே
தலையில் விழுந்தது தண்ணீர்.....
“எழுந்திருடா மணியாச்சு”
என்ற அம்மாவின் அதட்டலோடு
#பள்ளி_மாணவன்

No comments: