24/09/2018

#மலைச்சாரல்_காற்றே_வா



#மலைச்சாரல்_காற்றே_வா
மழைத்தூரல் தூவிட வா
தமிழ்ச்சாரல் காற்றே வா
கவித்தூரல் தூவிட வா

கடலை நுகர்ந்து
கருமை(வை) சுமந்து
வளியில் உலவிடும் மேகம்- நீ
குளுமை மிகுந்து
துளியாய்க் கசிந்து
தூவிடும் சாரலே கானம்

(மலைச்சாரல் காற்றே வா...)

வார்த்தை எடுத்து
வரியாய்த் தொடுத்து
வார்க்கிற கவியின் மூலம்- தமிழ்
மறையைப் படித்து
மனத்தில் ருசித்து
கோர்க்கிற கவியே பேசும்!

(மலைச்சாரல் காற்றே வா...)

✍️செ. இராசா

No comments: