30/09/2018

என்னத்த சொல்லுறது?

என்னத்த சொல்லுறது- இங்கே
என்னத்த சொல்லுறது?
எங்கே போகிறது- தேசம்
எங்கே போகிறது?

சீதைகள் ஒத்துழைத்தால்- இனி
பாதையை மாற்றிடலாம்!
மாதவி மறுதலித்தால்- வேறு
மார்க்கத்தைத் தேடிடலாம்

திருட்டு கற்பழிப்பு- இனி
முரட்டு குற்றமில்லை!
குருட்டு மன்றத்திலே- கடும்
இருட்டுக்கு பஞ்சமில்லை!

எங்கே மல்லையா- அவர்
இங்கே இல்லையா
கடனில் கந்தையா- அவரை
உடனே பிடியுமய்யா....

காவிரி மேலாண்மை- அட
தீர்ப்ப பின்னர் சொல்லு...
காவேரிமேல் ஆண்மை- அட
தீர்ப்ப உடனே சொல்லு...

No comments: