28/09/2018

கானல்நீரை(யும்) குடிப்போம்



அந்தரத்தில் தொங்குகின்ற
எங்கவாழ்க்கை பாரு- ஆனால்
சொந்தபந்தம் சொல்லுதுங்க
எங்கவாழ்க்கை வேறு!

அக்கரைய விட்டுப்புட்டு
இக்கரைக்கு வந்தோம்- ஆனால்
எக்கரையும் பச்சையின்றி
திக்கிமுக்கிப் போனோம்!

அங்கஇங்க கடனவாங்கி
அயல்நாடு வந்தோம்- ஆனால்
எங்க கடன் தீருமுன்னே
வயக்காட்டக் காணோம்!

என்னடா வாழ்க்கையென்று
நொந்துபோயி நிப்போம்- ஆனால்
காசுபணம் வேணுமேன்னு
கானல்நீரை(யும்) குடிப்போம்!

#அயல்நாட்டுப்_பாட்டாளிகளின்_குரலாய்

No comments: