13/09/2018

அறிவின் ஆழம் (குறளின் குரலில்)


அலைகள் மிகுந்த கடற்கரையில்
ஆழம் அதிகமாய் இருப்பதில்லை- அஃதே
ஆட்டம் மிகுந்த மனிதர்களின்
அறிவும் ஆழமாய் இருப்பதில்லை!

நிறைந்த குடங்கள் ஒருபோதும்
நீரைத் தழும்ப விடுவதில்லை- அஃதே
நிறைந்த ஞானம் ஒருபோதும்
நிலையில் தவறி வீழ்வதில்லை!

நரியும் நாயும் குரைத்தாலும்
பரிதியின் புகழோ குறைவதில்லை- அஃதே
மற்றோர் ஆயிரம் சொன்னாலும்
கற்றோர் புகழும் குறைவதில்லை!

✍️செ. இராசமாணிக்கம்

No comments: