06/09/2018

கடந்து வந்த பாதை


கடந்து வந்த பாதையிலே- நான்
நடந்து பின்னே போகையிலே- சிலர்
தடத்தைப் பற்றிச் செல்கையிலே- அந்த
கடவுளின் வீட்டைக் காணுகின்றேன்!

ஆதியில் வந்தது யாரென்று- அந்த
ஆதின மிளகியின் பின்சென்றே- முதல்
ஆதாம் மனிதன் வழிசென்றே - அந்த(ம்)
ஆதியில் அவனைக் காணுகின்றேன்!

மனிதன் தோன்றும் முன்னாலே- வந்த
மனிதக் குரங்கின் பின்சென்றே- உயிர்ப்
பிண்டச் செல்களின் வழிசென்றே- இந்த
அண்டமே அவனாய்க் காணுகின்றேன்!

வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

No comments: