03/09/2018

நீதான் என் பிரபஞ்சமே


நீ என் சுவாசத்தின் காற்றானாய்
நீ என் கண்களின் காட்சியானாய்
நீ என் சிந்தனையின் கருவானாய்
நீ என் கவிதைகளின் பொருளானாய்

நீ மட்டும் இல்லையென்றால்
நான் என்ற ஒன்றே இல்லை....

நீ மட்டும் இருப்பாயென்றால்
நான்கூட தொடுவேன் எல்லை

ஆம்...

நான் துளித்துளியாய் அருந்தியும் தீராத
நீதான் என் பெருங்கடலே...

நான் அணுஅணுவாய் ரசித்தும் சலிக்காத
நீதான் என் பிரபஞ்சமே...

நான் வரிவரியாய்ப் படித்தும் முடியாத
நீதான் என் திருக்குறளே...

நீ...நீதான்....நீயேதான்....!!!

No comments: