24/09/2018

என்ன ஆளய்யா இவன்?

என்ன ஆளய்யா இவன்?
**********************
ஓன்றாய் நாமிருந்தோம்
ஒருசேர தூக்கிவந்தான்
ஓரிரு நாட்கள் மட்டும்
ஒன்றோடு உறவாண்டான்...

எடுத்த ஒன்றை விட்டுவிட்டு
அடுத்த ஒன்றைத் தொடுகின்றான்

மீண்டும் ஒன்றைத் தொலைத்துவிட்டு
மீண்டும் ஒன்றைத் தேடுகின்றான்

என்ன இவனென்று
என்னிடம் கேட்கின்றன
இன்னும் தொலையாத
மிஞ்சியுள்ள பேனாக்கள்...

✍️செ. இராசா

#நான்_தொலைக்கும்_பேனாக்கள்

No comments: