08/09/2018

தமிழைப்போலவே



அருந்தும் அனைத்துமே
அற்புத ஊட்டச்சத்து- தமிழ்
தாய்ப்பால்போல...

அருகில் இருக்கையிலே
அருமை தெரிவதில்லை- தமிழ்
மனைவியைப்போல...


எத்தனைமுறை பேசினாலும்
அத்தனையும் இனிமையானது- தமிழ்
காதலியைப்போல...

அழகாய் இருந்தாலும்
ஆழமாய் இருக்கிறது- தமிழ்
கன்னிமனம்போல...

வயது முதிர்ந்தாலும்
வாலிபம் குறையவில்லை- தமிழ்
தமிழைப்போலவே...

✍️செ. இராசமாணிக்கம்
*******************************************************
குறிப்பு:

நான் எனும் மண்குடத்தில், “பணம்” என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை மிகவும் புதிய வடிவத்தில் இருந்தது என்று தம்பி Muthu நேற்று பாராட்டினார்கள்.

அந்த வடிவத்தில் இந்த கவிதை எழுத அவரின் பாராட்டுதல் மிகவும் தூண்டுதலாக இருந்தது.
மனமார்ந்த நன்றி தம்பி.

No comments: