28/09/2018

சிற்றின்பம் பேரின்பம்


துன்பவலி நீக்கம் சிற்றின்பம்
இன்பவழி பெருக்கம் பேரின்பம்

உயிர்கள் விரும்புவது சிற்றின்பம்
உயர்வோர் விரும்புவது பேரின்பம்

பொய்யில் மயங்குவது சிற்றின்பம்
மெய்யில் மகிழ்வது பேரின்பம்

இன்பத்தின்பால் விளைவது சிற்றின்பம்
இறைவனின்பால் சேர்ப்பது பேரின்பம்

கானலாய் மறைவது சிற்றின்பம்
கவிதையாய் மலர்வது பேரின்பம்

கவர்ச்சியில் வருவது சிற்றின்பம்
எழுச்சியில் உணர்வது பேரின்பம்

ஈருடல் சேர்மை சிற்றின்பம்
ஈகின்ற தாய்மை பேரின்பம்

No comments: