22/09/2018

திருநீறு


*******
வருவது எல்லாம் போவது திண்ணம்
இருப்பது எல்லாம் அழிவது திண்ணம்
நெஞ்சில் இதனை நிறுத்திட வேண்டி
நெற்றியில் இடுவோம் திருநீறு!

ஆக்ஞ சக்கரம் இருக்கிற இடத்தில்
ஆத்ம ஞானம் விழிப்புறும் இடத்தில்
தொட்டுத் தொட்டு தூண்டிட வேண்டி
பட்டையாய்ப் போடுவோம் திருநீறு!

நீரில்லா நிலங்கள் அழிவதுபோலே; திரு
நீறில்லா நெற்றியும் பாழ்படுமென்று: திரு
நீறினைப் பூசிடச் சொன்னவர்கள்: திரு
நீறினைப் புரிந்த சித்தர்களே!

No comments: