07/09/2018

அன்பு மகனின் 9வது பிறந்தநாள்





உயிரில் உருவாகி கவியில்(ன்) கருவாகி
உலகில் எனதான உறவே- நீ
புவியில் நிலையாகி ரவியைப் பலசுற்றி
கவிகள் பலபாடு மகனே!


அன்பை உருவாக்கி அருளை உனதாக்கி
உன்னை உருமாற்று உறவே- நீ
தமிழை ஊணாக்கி அறிவை ஊனாக்கி
உன்னை தரமாக்கு மகனே!

குறளைத் தினம்பாடி குரலில் அறம்பாடி
பிறப்பை மெய்யாக்கு உறவே- நீ
உறவைப் பெரிதாக்கி உலகை வசமாக்கி
சிறப்பைப் பெரிதாக்கு மகனே!

வாழ்க வளமுடன் மகனே!
வாழ்க வளமுடன் அப்பா!

✍️செ. இராசமாணிக்கம்

No comments: