21/09/2018

நெஞ்சோடு


எப்போதும் என்னோடு
இருக்கின்ற என்னெஞ்சே..
தப்பேதும் செய்யாமல்
வலிக்கின்றாய் ஏன்நெஞ்சே?!

அன்போடு துள்ளிவர
இன்புற்ற என்னெஞ்சே?
இன்றைக்குத் தயங்கிவர
துன்புற்றாய் ஏன் நெஞ்சே?!

வண்டாகி வருகையிலே
வரவேற்ற என்னெஞ்சே..
துண்டாகித் தூங்கையிலே
துயருற்றாய் ஏன் நெஞ்சே?!

கவிதையாய்ப் பிறக்கையிலே
களிப்புற்ற என்னெஞ்சே..
கற்பனையில் பிழையென்றால்
கலங்குகிறாய் ஏன் நெஞ்சே?

No comments: