13/09/2018

முயற்சி விநாயகரே


முயற்சியில் முடியா காரியம்
உலகில் உள்ளதாய் நினையாதே!
முயற்சியில் வெற்றியைத் தருகின்ற
உகரக் கடவுளை மறவாதே!

முயற்சியே திருவினை ஆகுவதால்
முயல்வதை வாழ்வில் நிறுத்தாதே!
முயற்சியில் அருள்மிகு விநாயகரே
முக்தியை அளிப்பார் மறவாதே!

முயன்றும் எதுவும் முடியலையா?!
முன்வினைச் செயலென அறிந்திடுவாய்!
முன்வினைத் தடைகளை அறுத்திடவே
முதல்வனின் கால்களில் வீழ்ந்திடுவாய்!

முயற்சியை என்றும் நிறுத்தாது
வாழ்க்கையில் தினமும் முயன்றிடுவாய்!
முயற்சியின் இலக்கினை அடைவதற்கு
விநாயகர் துணைவர வேண்டிடுவாய்!

---------செ. இராசா------
(போன வருடம் எழுதியது. இப்போதுதான் விநாயகர் அருளால் இங்கே அரங்கேறுகிறது)

அனைவருக்கும் #இனிய_வினாயகர்_சதுர்த்தி_வாழ்த்துகள்_2018

No comments: