29/07/2018

வேண்டும் நீ என்னோடு

உன்னோடு இருக்கையிலே
உன்னருமை தெரியவில்லை
உனைவிட்டுப் பிரிந்தாலோ
உலகமே தெரிவதில்லை

என்னோடு நீ இருந்தால்
என்னுணர்வு எனக்கில்லை
எனைவிட்டு நீ பிரிந்தால்
என்றைக்கும் நானில்லை

உயிராக மெய்யாக
உயிர்மெய் உணர்வாக
உள்ளத்தில் நீ இருந்தால்
உணவேதும் தேவை இல்லை....

அன்பான என்னுறவே...
அழகான நல்லுறவே....
என்கவியே...நீ இருந்தால்
எனக்கேதும் தேவை இல்லை...

No comments: