28/07/2018

உணவே மருந்து (குறளின் குரலில்)


உடம்பில் மூன்று காரணிகள்
உடம்பை நலமுடன் வைத்திடுமே!
மூன்றின் சமநிலை கெடுமென்றால்
தோன்றிடும் நோய்கள் நிச்சயமே!

மண்சார் உணவை உட்கொண்டால்
எண்சாண் உடம்பு பிழைத்திடுமே!
எண்ணெய்கள் இல்லா உணவுண்டால்
பிணிகள் தூரமாய் விலகிடுமே!

பசித்துப் புசிக்கப் பழகிவிட்டால்
பலநாள் பூமியில் வாழ்ந்திடலாம்!
உமிழ்நீர் குழைத்து உட்கொண்டால்
உடலை நோயின்றிக் காத்திடலாம்!

✍️செ.இராசா

No comments: