16/07/2018

காண்பதெல்லாம் நீயன்றோ


அதிகாலைப் புலருகின்ற
.....................கதிரவனில்
அழகான... நின்முகத்தைக்
....................காணுகின்றேன்

இலைநுனியில் தொங்குகின்ற
.....................பனித்துளியில்
இனிதான.... நின்இதழைக்
.....................காணுகின்றேன்

காக்கைகளின் கரியநிறச்
...................சிறகினிலே
கவிதா உன்கண்ணழகைக்
.....................காணுகின்றேன்

பூக்களினை நுகருகின்ற
...................பொழுதினிலே
மூக்கில்மோதும் (சு)வாசமாக
...................உணருகின்றேன்

என்னுயிரை இயக்குகின்ற
....................தமிழ்மொழியில்
என்னவளே...நின் இருப்பைக்
....................காணுகின்றேன்!

அண்டம்முதல் பிண்டம்வரை
.......................அத்தனையும்
அடியேநான்...காண்பதெல்லாம்
.....................நீயன்றோ?!!

1 comment:

சிகரம் பாரதி said...

அழகிய வரிகள். வாழ்த்துகள்.

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/