24/07/2018

இல்லத்தரசி


இல்லாள் இருக்கிற இல்லத்திலே
இல்லா தென்பதே இல்லையய்யா..
இல்லாள் இல்லா இல்லத்திலோ
இல்லா தென்பதே இருக்குமய்யா..

பொல்லா வினைகள் தொடர்ந்தாலும்
இல்லாள் துணையால் ஓடுமய்யா...
சொல்லா சொற்கள் சுட்டாலும்
இல்லாள் சொல்லால் ஆறுமய்யா...

கல்லாய்க் கணவன் இருந்தாலும்
இல்லாள் கண்ணில் கடவுளய்யா..
எல்லாப் பிணக்குகள் இருந்தாலும்
இல்லாள் நமக்கும் தெய்வமய்யா...

No comments: