21/07/2018

இருள் நீங்கும் ஒளியேற்றி---112வது களஞ்சியம் கவிதைப் போட்டி---கிடைத்த இடம்: முதலிடம்



112வது களஞ்சியம் கவிதைப் போட்டி
************************************
கிடைத்த இடம்: முதலிடம்
நடுவர்_________: கவிஞர் திரு. வாலிதாசன் அவர்கள்
அமைப்பு_______: தமிழ்ப்பட்டறை
(8 இலக்கியப் பேரவைகள் உள்ளது)
தலைவர்_______: திரு. சேக்கிழார் ஐயா


 https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2121685094817062/

ஏதேதோ கவி செய்தேன்
எனக்கேதும் திருப்தி இல்லை
என்னிறைவா உனைப்பாட
எனக்கிங்கே தகுதி இல்லை

இருந்தாலும் உனைப்போற்ற
இளங்கவி நான் முயலுகின்றேன்
இறுமாப்பில் சொல்லவில்லை
இறையன்பில் சொல்லுகின்றேன்

ஒரு பானை சோற்றுக்கு
ஓரு சோற்றைப் பதமென்பர்
ஒரு இனத்தின் பெருமைக்கு
ஒரு நூலே சான்றென்பர்

அறம் பொருள் இன்பம் சொல்லும்
அறநூலாய்த் திகழ்கின்ற
அந்நூலே நம்மினத்தின்
அடையாளம் என்று சொல்வேன்..

தமிழரினம் பெருமை கொள்ளும்
தமிழ்மறையே உனைப்பாடி
தமிழனாக என்கவியில்
தன்னிறைவு அடைகின்றேன்

இருள் நீங்கும் ஒளியேற்றி
இடர் நீங்கும் வழிகாட்ட
இறைசொன்னத் தமிழ்மறையை
இமயத்திலும் உயர்வென்பேன்..

தமிழ்த்தாயின் தவப்புதல்வன்
தரணிக்கு செய்ததினை
தமிழடியேன் நானிங்கே
தமிழ்கொண்டே வாழ்த்துகிறேன்

வாழ்க தமிழ்மறை!
வாழ்க தமிழ்த்தாய்!

✍️செ. இராசா

No comments: