19/07/2018

எது வீரம்?!


எண்ணிக்கை என்பது பொருட்டல்ல
எண்ணத்தின் வலிமையே பொருட்டாகும்
வெற்றியும் தோல்வியும் முடிவல்ல
காட்டிடும் வீரமே பொருட்டாகும்

பாரதப் போரின் நிகழ்வினிலே
பாண்டவர் படைகள் ஏழோடு
பதினோரு அக்ரோனிப் படைமோதி
பகைவரை வென்றது வீரமன்றோ?

ஈழப் போரின் முடிவினிலே
உலகத்துப் படைகள் அத்தனையும்
எதிரியின் படையுடன் இருந்தாலும்
எதிர்த்த நெஞ்சுரம் வீரமன்றோ?!!

✍️செ. இராசா

No comments: