07/07/2018

வெண்ணிலா நீ!--களஞ்சியம் கவிதைப் போட்டியில் பங்குபெற்ற கவிதை



நீலவானில் உலவுகின்ற
நிலவினைப்போல்- எந்தன்
நினைவு வானில் சுற்றுகின்ற வெண்ணிலா நீ!

அண்டத்திலே மின்னுகின்ற
மீன்களைப்போல்-உயிர்ப்
பிண்டத்திலே ஒளிர்கின்ற உள்ளொளி நீ!

மேகத்திலே தோன்றுகின்ற
மின்னலைப்போல்- தமிழ்
மோகத்திலே வெடிக்கின்ற காவியம் நீ!

புவியுலகை இயக்குகின்ற
சூரியன்போல்- தமிழ்க்
கவியுலகை ஆளுகின்ற கம்பனும் நீ!

ஈரடியில் உலகளந்த
இறைவனைப்போல்- எழில்
ஈரடியில் குறள்படைத்தப் புலவனும் நீ!

சிறகடித்து உயருகின்ற
பறவையைப்போல்- சிந்தைச்
சிறகாலே விண்ணுயர்ந்த பாரதி நீ!

தட்டிதட்டிச் செதுக்குகின்ற
சிற்பியைப்போல்- தமிழ்
பட்டறையில் படைப்போரின் நற்றமிழ் நீ

No comments: