08/07/2018

வீழ்ந்தது போதும்--145-களஞ்சியம் கவிதைப் போட்டி--வெற்றிக் கவிதை



வீழ்ந்தது போதும் தமிழா- நாம்
வீழ்ந்தது போதும் தமிழா
இழந்தது போதும் தமிழா- நாம்
இழந்தது அதிகம் தமிழா

நடித்திடும் தலைவனின் பேச்சில்- அன்று
துடிப்புள்ளத் தொண்டனாய் இருந்தாய்
அடித்திடும் கொள்ளையைக் கண்டும்- இன்று
வெடித்திட ஏனோ மறந்தாய்!

இலவசம் இலவசம் என்றே- அன்று
இலவசப் பரப்புரை கேட்டாய்!
அதன்வசம் ஆட்சியைப் பிடித்தே- இன்று
அவர்விசம் கொடுப்பதும் கண்டாய்!

கொடுமை கொடுமை என்றால்- அந்தக்
கொடுமை நீங்குமா நண்பா!
கொடுமைக் கெதிர்குரல் கொடுத்தே- அந்தக்
கொடுமையைக் களைந்திடு நண்பா!

சாக்கடை அரசியல் செய்தால்- இனி
மூக்கினை மூடிட வேண்டாம்!
நாக்கிலே அரசியல் செய்தால்- இனி
வாக்கிலே புதுமை செய்வோம்!



https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2255202768131960?sfns=mo

No comments: