13/07/2018

தாய்லாந்து




“தாய்லாந்து”

அன்று
உலகின் பார்வையில்
ஒரு மலிவான தேசம்

ஆனால்.. இன்றோ
உலகமேப் போற்றுகின்ற
உன்னத தேசம்

ஆம்
தாய்மை பூமியாய்
தலை நிமிர்ந்து நிற்கும்
அந்த தாய் தேசத்தில்
அன்று நடந்தது
வெறும் சம்பவமல்ல...
பெரும் ஆச்சரியம்.....
மயிர்கூச்சொறியும் ஆச்சரியம்...

பூமிப்பந்தின் பார்வை
கால்பந்து போட்டியில் இருந்த
அந்தத் தருணத்தில்...

புவிப் பந்தின் மறுபக்கம்
உலக அளவில் இல்லாமல்
உள்ளூர் அளவிலும் நடந்தது
சில சிறார்களின் கால்பந்தாட்டம்

பயிற்சி ஆட்டம் முடிந்தவுடன்
பயிற்சியாளர் துணையோடு
பனிரெண்டு சிறுவர்களின்
படையொன்று கிழம்பியது

சிறுவரில் ஒருவனின்
பிறந்தநாள் விழாவென்று
இனிப்போடு கிழம்பியது
இளஞ்சிறார் பட்டாளம்...

தாம்லுவாங் பெயர் கொண்ட
தாழ்வானக் குகை தேடி
பயமறியா இளங்கன்றின்
படையொன்று சென்றதங்கு

அணுமதி வாங்கித்தான்
அனைவருமே சென்றாலும்
முகப்பைத் தொடுகின்ற
முனைப்போடு சென்றவர்கள்,
பெருமழைக் கொட்டியங்கே
பெருவெள்ளம் புகுந்ததினால்
வெளியேற வழியின்றி
குகையின் உள்ளேயே
சிறைபட்டுப் போனார்கள்...

நீச்சல் தெரியாதோர்
நீர் கண்டு பயந்தார்கள்
வெளியேற வழியின்றி
உள்ளே...உள்ளே சென்றார்கள்

சரியான கும்மிருட்டில்
சகலரும் மாட்டிக்கொண்டு.....
குளிரில் நடுங்கியே
குருவோடு தங்கினார்கள்...

ஆழக் குகைக்குள்ளே
ஆக்ஸிஜனும் பத்தவில்லை...
உணவுக்கும் வழியில்லை
உடுத்தவும் உடையில்லை
..........
இப்படியே குகைக்குள்ளே
இருளோடு இருந்தார்கள்...
.....
மூச்சை நீட்டிக்கும்
மூச்சுப் பயிற்சியினால்
அனைவரின் உயிர்களையும்
ஆசிரியர் பிடித்து வைத்தார்
..........

பெற்றோரும் மற்றோரும்
பதறினார்கள்... கதறினார்கள்...
எங்கே வென்று எல்லோரும்
எங்கெங்கோ தேடினார்கள்...

அனைவரும் விட்டுச்சென்ற
அத்தனை பொருட்களும்
அவர்களின் இருப்பினை
அடையாளப் படுத்தியது...

தாய்லாந்து அரசாங்கம்- குகை
வாயில் கூடியது
தாய்லாந்து மக்களெல்லாம்
சேய் பிரிவால் வாடியது

எத்தனையோ திட்டங்கள்
எல்லாமே தோல்வியுற
என்ன செய்வதென்று
எல்லோரும் யோசிக்க

உள்குகை அமைப்பறிந்த
உள்நாட்டு வீரர்களும்
உள்நீச்சல் கற்றறிந்த
வெளிநாட்டு வீரர்களும்
ஒன்றாகக் கைகோர்த்து
ஒவ்வொரு குழந்தையாய்
அனைவரையும் மீட்டார்கள்..

பதினேழு நாட்களாய்
பரிதவித்த குழந்தைகளை
பத்திரமாய் மீட்டெடுக்க
பட்டபாடு கொஞ்சமில்லை...

இருப்பிடத்தைக் கண்டறிந்த
இங்கிலாந்து வீரர்கள்
தாய்லாந்து தேசத்தின்- மறு
தாயாகத் தெரிந்தார்கள்

மீட்பு முயற்சியில்
மாட்டிய ஒரு வீரர்
தன்னுயிர்த் தியாகத்தில்
தெய்வமாய் வாழ்கின்றார்..

மனித நேயங்கள்
மலிவுற்ற காலத்தில்
மண்ணில் நிகழ்ந்த
மகத்தான சம்பவம்
மயிர்கூச்சரியும்
ஆச்சரிய அற்புதம்

வாழ்க மனிதநேயம்
வாழ்க தாய்மையுள்ளம்
வாழ்க வளமுடன்

No comments: