06/07/2018

சென்று வா மகளே


சென்று வா மகளே..சென்று வா...
அன்பால் வென்று வா.. மகளே வென்று வா..

தாய்தந்தை உறவெல்லாம் கண்டு வா- நீயும்
தாயோடு மகிழ்வாகச் சென்று வா....

ஆட்டோடு அன்பாகப் பேசி வா- நீயும்
மாட்டுக்கும் புல்கொஞ்சம் போட்டு வா..

கருப்பனின் வாலினைத் தடவி வா- அவன்
குரைத்தால் அவனோடு கொஞ்சி வா..

தமிழைச் சரியாக கற்று வா- நீயும்
தந்தைக்கும் தமிழமுது கொண்டு வா....

No comments: