01/08/2018

எத்தனை காலம்தான் முதுகில் குத்துவாய் மானிடா.



எத்தனை காலம்தான்
முதுகில் குத்துவாய் மானிடா.....நீ
எத்தனை காலம்தான்
முதுகில் குத்துவாய் சொல்லடா?

நாசம் செய்யவா
நேசம் செய்கிறாய் மானிடா....நீ
மோசம் செய்யவா
பாசம் வைக்கிறாய் சொல்லடா?

நட்பு என்பதும்
கற்பு தானடா மானிடா......நீ
தப்பு செய்யவா
நட்பு கொள்கிறாய் சொல்லடா?

புரூட்டஸ் துரோகத்தால்
சீசர் செத்தது தொடர்வதா.... இனி
நரிகள் சதியினை
பரிகள் அழிப்பதைக் காணடா...

எட்டப்ப நாய்களால்
கட்டப்ப பொம்மர்கள் வீழ்வதா....இனி
போட்டி உலகிலே
வெற்றி கொள்வதைப் பாரடா....

✍️செ. இராசா

குறிப்பு
*******
பொதுவாக ஊரில் நடக்கும் துரோகத்திற்கு சிறு மருந்தாகவே இந்த பாடல்...

No comments: