13/07/2018

நயம்படப் பேசு (குறளின் குரலில் )


நாணில் கிழம்பிடும் சுடுசரம்போல்
நாவில் கிழம்பிடும் சுடுசொற்கள்
நம்மை நாமே வீழ்த்துகின்ற
நரகத்தின் படுகுழி என்றறிவோம்!

சொல்லிய சொற்கள் எல்லாமே
சொல்லின் பொருளைத் தரும்போது
சொல்லும் சொற்களின் விளைவாக
சொல்லே வெ(கொ)ல்லும் என்றறிவோம்

எண்ணங்கள் பெற்ற பிள்ளைகளாய்
இன்சொல் தீஞ்சொல் இருப்பதினால்
இன்பம் எங்கும் நிலைப்பதற்கு
இனிதே நயம்படப் பேசிடுவோம்!

✍️செ. இராசா

No comments: