15/07/2018

கவிதைப்_பெண்ணுடன்_நான்



அணைக்குள் பிடிபட்ட நதிபோல்- என்
அணைவுக்குள் அகப்பட்டக் கவியே-என்
ஆசைக்கு இல்லையடி தாழ்ப்பாள்?!-உன்
அன்பிலே பொங்குதடி கவிப்பால்!

காவிரியால் மகிழ்கின்ற உழவனைப்போல்
கவியினால் மகிழ்கின்ற காதலனே-நீ
காதலிக்கும் நங்கையிந்த கவிமகளை-நீ
காலமெல்லாம் காதலித்தால் இருப்பாள்!

ஆதலால் காதல் செய்...காதலா- தமிழ்க்
காதலால் கவிதை செய்... காதலா

#கவிதைப்_பெண்ணுடன்_நான்

No comments: