07/07/2018

பொறுமை


போற்றிய பலரை மனதில் நினைத்து
தூற்றிய சிலரை மறந்திடுவாய்- நீ
ஆற்றிடும் கடமையை மனதில் நினைத்து
தூற்றிடும் சொற்களைப் பொறுத்திடுவாய்

புகழ்ச்சி வார்த்தையை ஏற்றது பொலவே
இகழ்ச்சி வார்த்தையும் ஏற்றிடுவாய்-மனம்
மகிழ்ச்சி நிலையில் நின்றிட வேண்டின்
நெகிழ்ச்சித் தன்மையும் கற்றிடுவாய்!

No comments: