08/02/2022

கடைசித்தமிழன் Vs ஆதித்தமிழன்

 #கடைசித்தமிழன்:

Who are you man?
இங்கே என்ன செய்ற?

#ஆதித்தமிழன்;

என்மரபில் பூத்துவந்த எள்ளுகொள்ளுப் பேரனே
என்னமொழி பேசுகிறாய் இன்று?

#கடைசித்தமிழன்;

I don't understand. நீ யாருப்பா?
இது....தமிழ் land.

#ஆதித்தமிழன்:

பிறமொழிக்குள் நன்தமிழைப் பின்னுகின்ற பேரா...
உறவில்நான் மூத்த உறவு

#கடைசித்தமிழன்:

So what? என்ன வேணும்?!

#ஆதித்தமிழன்;

அகத்தியப் பாதையில் ஆக்கினோம் நூல்கள்
அகத்திலே ஏற்றீரா ஐயா...-சகத்தின்
பிறமொழி மோகத்தில் பைந்தமிழைச் சேர்த்து
மறப்பதா நற்றமிழர் மாண்பு

#கடைசித்தமிழன்;

என்ன செய்றது?
You know still I am in proud. Because I am the one speaking Tamil in this entire world. நான் செத்தா...தமிழ்மொழி போச்சுதாம்?! தெரியுமா உனக்கு?!

#ஆதித்தமிழன்:

கடைத்தமிழன் என்றெல்லாம் கண்டபடி பேசும்
மடையனே கேளடா வந்தென்- விடையை
திருக்குறள் உள்ளவரை தீந்தமிழ் பேசும்
ஒருவன் பிறப்பான் உடன்!

✍️செ. இராசா

கரு: கவிஞர் அசோகன் சுப்பிரமணியன் விராலிமலை ஐயா அவர்களின் கவிதையில் இருந்து கிடைத்தது. 🙏

No comments: