03/02/2022

இராமானுஜருக்கு ஓர் பாடல்



ஸ்ரீ ரங்க ரங்கதிரு சேவகனே
சீர் செய்ய வந்தகுரு வானவனே
நாத்திகர் போற்றுகின்ற ஆத்திகனே
கோத்திரத் தீயணைக்க வந்தவனே..

ஸ்ரீ ராம ராமராம ராமானுஜா
ஸ்ரீ ரங்க ரங்கநாத ராமானுஜா

தன்னலம் கண்டிடாத தத்துவனே
சொன்னசொல் மந்திரத்தைச் சொன்னவனே
விக்ரகம் மீட்டுவந்த வித்தகனே
திக்கெட்டும் உய்யவழி செய்தவனே...

ஸ்ரீ ராம ராமராம ராமானுஜா
ஸ்ரீ ரங்க ரங்கநாத ராமானுஜா

மார்க்கங்கள் தாண்டிவென்ற மகராசனே
ஏற்கின்ற பாதைதந்த இறைநேசனே..
சாத்திர நேர்த்திசெய்த சாமர்த்யனே
ஆத்திரம் என்றுமில்லா ஆனந்தனே..

ஸ்ரீ ராம ராமராம ராமானுஜா
ஸ்ரீ ரங்க ரங்கநாத ராமானுஜா

✍️செ. இராசா

(உலகிலேயே மிகப்பெரிய இராமானுஜ சமத்துவச் சிலை 216 அடி உயரத்தில் ஹைதராபாத்தில் வருகிற 5 ஆம் தேதி திறக்கவுள்ள நிலையில் இப்பாடல்)

No comments: